தலையில் கல்லைப்போட்டு மாணவர் கொலை.. விசாரணையில் வெளியானது ‘பகீர்’ தகவல்..!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவ்வப்போது, தாத்தா – பாட்டியை பார்க்க பொற்பொதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு தாத்தா – பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவு, வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கிய மணிகண்டன் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மணிகண்டன் தங்கி படித்த விடுதியில் 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர், 9-ம் வகுப்பு மாணவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பார்த்த மணிகண்டன், வார்டனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இந்தக் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மாணவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.