துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் – ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் திரும்பினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், டெக்ஸாஸில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது என்று உருக்கத்துடன் கூறினார்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் முகங்களை இனி பார்க்க முடியாது…எத்தனை உயிர்கள் நொறுங்கின என்று வேதனையுடன் கூறிய அவர், துப்பாக்கி சட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்து தாமதம் செய்பவர்களை மறக்க மாட்டோம் என்றும் அவர் சாடினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.