நிஃப்ட் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு.!

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனத்தின் இயக்குனர் அனிதா மேபெல் மனோகர், சாதிய வன்மத்துடன் நடந்து கொள்வதாக கல்வி நிறுவனத்தின் உதவி இயக்குநர் இளஞ்செழியன், தரமணி உதவி ஆணையரிடம் புகார் அளித்தன் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அதேப்போல், அனிதா மேபெல் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் இளஞ்செழியன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் தரமணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.