மாநிலங்களவை தேர்தல் – அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:
பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. 
இதற்கிடையே, வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.