மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு

அமலாபுரம்:
ந்திராவில் மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கோனசீமா மாவட்டத்தின் பெயரை ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம்’ என மாற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து, அமலாபுரத்தில் உள்ள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஷ்வரூப் வீட்டு முன் நேற்று ஏராளமானோர் திரண்டு கல்வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென அமைச்சரின் வீடு தீப்பற்றி எரிந்தது.

இதையடுத்து, வன்முறை நடைபெற்ற அமலாபுரம் தொகுதிக்கு 144 தடை உத்தரவும், வன்முறை குறித்து விசாரணை நடத்தவும் ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.