மீன் ஏற்றி சென்ற டெம்போ கவிழ்ந்து விபத்து.. பெண் பரிதாப பலி..!

மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்த விபத்தில் மீன் விற்கும் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர்  உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பெண்கள் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு திருவாரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததால் டெம்போ வாகனம் கவிழ்ந்தது. இதில், கல்பனா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்திவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.