லக்னோ – பெங்களூர் அணிகளுக்கிடையில் இறுதி சுற்றுக்கு தகுதி காணும் போட்டி இன்று

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (25) நடைபெறும் வெளியேற்றல் சுற்றில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன.

ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

நேற்று (24) தொடங்கிய ‘பிளே ஆப்’ சுற்றில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தோல்வி அடைந்த ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி எதிர்வரும் 27 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் ‘தகுதி-2’  ‘Qualifier-2’ போட்டியில் ஈடுபடும்.

ராஜஸ்தான் அணியுடன் விளையாட போவது லக்னோ வா? பெங்களூரா? என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (27) நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ‘Qualifier-2’ ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி இப்போட்டியை விட்டு வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.