12ம் வகுப்பு மாணவன் கொலை.. விசாரணையில் வெளிவந்த திடீர் திருப்பம்..!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், பொற்பதிந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்  அரியலூரில் உள்ள  மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் அவரது தாத்தா பாட்டியை பார்ப்பதற்காக பொற்பதிந்தநல்லூர் கிராமத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.

 அப்பொழுது அவர் வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனின் தலையில் மர்மநபர்கள் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 முதற்கட்ட விசாரணையில் அந்த விடுதியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு மாணவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது மணிகண்டன் பார்த்ததாகவும் அது குறித்து வார்டனிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. அந்த மாணவனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.