இராணுவ தளபதி பதவியிலிருந்து விடுகை பெறும் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பதவியேற்கவுள்ளார்

இராணுவ தளபதியின் கடமைகளிலிருந்து மே 31 ஆம் திகதி விடுகை பெற்றுக்கொள்ளவிருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், 2022 ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார். பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் புதிய நியமனத்துக்கான அலுவலக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார்.

அதேநேரம் இராணுவ பதவி நிலை பிரதானி நியமனத்திலிருந்து விடுகை பெறவிருக்கும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இராணுவ தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.