இலங்கை நிதியமைச்சராக பொறுப்பேற்றார் பிரதமர்| Dinamalar

கொழும்பு,-கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நம் அண்டை நாடான இலங்கையின் நிதி அமைச்சராக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று பொறுப்பேற்றார்.

இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. மக்களின் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார்.இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஐந்து முறை பிரதமராக இருந்துள்ள ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமித்தார். கடந்த, 12ம் தேதி அவர் பிரதமர் பதவியை ஏற்றார். பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து, நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி ரனில் விக்ரமசிங்கேயை, அதிபர் கோத்தபய கேட்டுக் கொண்டார். அதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரதன்மை, தேசிய கொள்கைகள் துறைகளின் அமைச்சராக ரனில் விக்ரமசிங்கே நேற்று பொறுப்பேற்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.