ஒப்பந்ததாரரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

கும்பகோணம் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிய ஒன்றிய ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரரான சரவணன், கழிவுநீர் தொட்டி அமைக்க தனிநபரிடம் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இதற்கு அனுமதி வழங்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜதுரை, லஞ்சம் கேட்டதையடுத்து அது குறித்து சரவணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் அதிகாரிகளின் திட்டப்படி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சரவணன் லஞ்சம் கொடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் ராஜதுரையை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.