சனி வக்ர பெயர்ச்சி! ஆபத்தை சந்திக்கப்போகும் நான்கு ராசிக்காரர் இவர்கள் தான்.. எச்சரிக்கையாக இருங்க



 கும்ப ராசியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் அதிசார பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான், ஜூன் 5ம் திகதி முதல் மகர ராசிக்கு திரும்பும் வகையில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.

ஜூலை 12ம் திகதி மகரத்திற்குத் திரும்பும் அவர், அதுவரை சில மோசமான பலன்களை சில ராசிகளுக்கு தர உள்ளார்.தற்போது அந்த ராசிக்காரர் யார் யார் என பார்ப்போம். 

கடகம்

சனியின் இந்த வக்ர பெயர்ச்சி கடக ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் நிகழ்கிறது. ஏற்கனவே அஷ்டம சனி நடக்கும் நிலையில், இந்த வக்ர நிலையால் சாதகமற்ற நிலை ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், தேவையற்ற செலவை செய்வீர்கள்.

நிதி தொடர்பான விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுக்கவும். இல்லையெனில் தேவையற்ற விரய செலவாகும். எளிதாக முடிய வேண்டிய சில வேலைகள் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு தங்களின் குடும்பம், பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான பலன்களே கிடைக்கும். கண்டக சனி காரணமாக குடும்பத்தில் அமைதி கெட வாய்ப்புள்ளது. தேவையற்ற கருத்து வேறுபாடு காரணமாக மன நிம்மதி குறையும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுதலும், வியாபாரத்தில் லாபத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உடல் நலம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரும்.

கன்னி

சனி அதிசார பெயர்ச்சி காரணமாக ரோக சனியால் உங்களின் ஆரோக்கிய பிரச்னைகள் நீங்கக்கூடியதாகவும், எதிரிகள் நீங்கும் நற்பலன்களைப் பெற்று வந்தீர்கள்.

இந்நிலையில் வக்ர சனியின் காரணமாக சில உடல் நலப் பிரச்னைகள் தொந்தரவு ஏற்படுத்தும். வேலை வாய்ப்பும், புதிய இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிரிகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மகரம்

சனி அதிசார பெயர்ச்சியால் ஜென்ம சனி விலகி, பாத சனி நடக்கும் நிலையில், தற்போது சனி வக்ர நிலை காரணமாக உங்களுக்கு சில நற்பலன்கள் ஏற்பட்டாலும்,சில பாதகமான சூழல் அதிகரிக்கும். வேலை மாற்றம், திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக அமையும்.

இருப்பினும் புதிய தொழில் தொடங்க சாதகமாக இருக்காது. பணியிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். அதே சமயம் உங்களின் பணிச்சுமையும் அதிகரிக்கும்

. நிதி நிலை உயரும் வண்ணம் உங்களின் பதவி, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கூடுதல் முயற்சியால் நீங்கள் நினைத்த இலக்கையும், லாபத்தையும் பெற முடியும்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.