சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை குணமாக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்


சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது ஒருவித வலி மற்றும் எரிச்சல் உண்டாகும்.

இதற்கு பொதுவான காரணம், சிறுநீர் குழாய் தொற்று ஆகும். சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்த தொற்றுக்கள் உண்டாகும்.

இதற்கு தீர்வு என்ன?

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை குணமாக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்

தினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் நடக்கும் ஆச்சரிய நன்மைகள்

நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.

தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்.

முக்கிய குறிப்பு: மூன்று நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை நீண்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.  

சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை குணமாக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.