தனி மாநிலம் கேட்கும் ராஜஸ்தான், குஜராத் பழங்குடியினர்… பில் பிரதேசத்துக்கு வலுக்கும் கோரிக்கை

மேற்கு இந்தியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான தனி மாநில கோரிக்கை “பில் பிரதேசம்”, நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் எழுந்துள்ளது. கோரிக்கைக்கான காரணம் என்ன? என்பதை இங்கே காணலாம்.

பில் பிரதேசம் என்றால் என்ன?

குஜராத்தை தளமாகக் கொண்ட பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது. அதில், குஜராத்தில் 16, ராஜஸ்தானில் 10, மத்தியப் பிரதேசத்தில் ஏழு மற்றும் மகாராஷ்டிராவில் ஆறு மாவட்டங்களும் அடங்கும்.

BTP ராஜஸ்தான் தலைவர் டாக்டர் வேலாராம் கோக்ரா கூறுகையில், சமூக சீர்திருத்தவாதியும் ஆன்மீகத் தலைவருமான கோவிந்த் குரு, 1913 ஆம் ஆண்டு மன்கர் படுகொலைக்குப் பிறகு பழங்குடியினருக்கான தனி மாநில கோரிக்கையை முதலில் எழுப்பினார். நூற்றுக்கணக்கான பில் பழங்குடியினர் பிரிட்டிஷ் படைகளால் நவம்பர் 17, 1913 அன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் உள்ள மன்கர் மலைகளில் கொல்லப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, பில் பிரதேசத்திற்கான கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டுவதாக தெரிவித்தார்.

பழங்குடியினருக்கு ஏன் தனி மாநிலம் வேண்டும்?

கோக்ரா கூறுகையில், முன்பு ராஜஸ்தான், குஜராத்தில் உள்ள துங்கர்பூர், பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளை போன்றவை ஒரே அமைப்பின் பகுதியாக இருந்தது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, பழங்குடியினரின் பெரும்பான்மையான பகுதிகள் அரசியல் கட்சிகளால் பிரிக்கப்பட்டன. இது, பழங்குடியினர் ஒன்றுகூடுவதை தடுத்தது.

பழங்குடியினருக்காக அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்கள், திட்டங்கள் இயற்றினாலும், அதனை கொண்டு சேர்ப்பதிலும், அமல்படுத்துவதிலும் கால தாமதம் தான் ஏற்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 244(1) பிரிவின் கீழ் ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடியினரின் நலன்களைப் பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், இவை காங்கிரஸ் அல்லது பாஜகவாக யார் ஆளும் கட்சியாக இருந்தாலும், வெறும் உறுதிமொழிகளாகவே உள்ளன.

இந்தியாவின் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக பாரம்பரிய கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் 1996இல் இயற்றப்பட்ட சட்டம் தான் Provisions of the Panchayats.

இந்த சட்டத்தை 1999 இல் ராஜஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டது. அதன் விதிகளை 2011 இல் வெளியிட்டது. ஆனால் 25 வருடங்களாக துங்கர்பூரில் வசிக்கும் எனது கிராமமான பால்தேவல் மக்களுக்கு இச்சட்டம் பற்றி தெரியாது. பாஜக, காங்கிரஸின் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கூட சட்டம் பற்றி தெளிவான புரிதல் கிடையாது.

2020 டிசம்பரில் ராஜஸ்தான் ஜிலா பரிஷத் தேர்தல் முடிவுகளில் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு BTP கட்சியின் முக்கியதவத்தை அறிந்திருக்கக்கூடும். ராஜஸ்தானின் துங்கர்பூரில் BTP ஆதரித்த ஜிலா பிரமுக் வேட்பாளரை தோற்கடிக்க, ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் ZP உறுப்பினர்கள் இணைந்தனர். ஆனால், துங்கர்பூர் ஜிலா பரிஷத்தில் BTP ஆதரவு பெற்ற 13 சுயேச்சைகள் 27 இடங்களில் வெற்றிபெற்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் முறையே 8 மற்றும் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பில் பிரதேசத்திற்கான கோரிக்கை வலுப்பெறுகிறதா?

2017 ஆம் ஆண்டு குஜராத்தில் உருவாக்கப்பட்ட BTP கட்சியின் முக்கிய கோரிக்கை தனி மாநிலம் பில் பிரதேசத்தை உருவாக்குவது தான். இதற்காக பழங்குடியினரைத் திரட்டவும், விழிப்புணர்வைப் பரப்பவும் பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக கோக்ரா தெரிவித்தார்.

பழங்குடியின இளைஞர்கள் காங்கிரஸ், பாஜக இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். சமூக ஊடகங்கள் உதவியின் மூலம், உங்களுக்கான விஷயத்தை படித்து நீங்கள் உறுதிப்படுத்தலாம். அப்படி 75 ஆண்டுகளாக நாங்கள் எப்படி இருந்தோம் என்பதைப் பார்க்கும்போது, தனி பில் பிரதேசம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.