'தமிழக மக்கள் பிரதமர் மோடியை மனதார வரவேற்கின்றனர்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தமிழக மக்கள் பிரதமர் மோடியை மனதார வரவேற்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார்.மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். மேலும், ஆறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், “துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து பிரதமர் மோடியை மனதார வரவேற்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.