பாஜக தலைவர் பேச்சால் கிளம்பிய புது சர்ச்சை..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மக்களவை தொகுதி எம்பியாக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கரீம்நகரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் பண்டி சஞ்சய் கலந்து கொண்டார்.

Bandi sanjay kumar

அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு மதராக்களே காரணம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரசாக்கள் செயல்படுகிறது. மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. எனவே சட்டவிரோத செயல்களை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும்.

மசூதி வளாகங்களை தோண்டி பார்த்தால் சிவலிங்கங்கள் தான் இருக்கின்றன. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். அதில், சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம்.

varanasi-masque

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். ‘ராம ராஜ்ஜியம்’ வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம்” என்று பேசினார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.