பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல்.!

கடலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அந்த பெருமாள் கோவிலில் உள்ள பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரத்தை ஊன்ற கோவில் திருப்பணி குழுவினர் முற்பட்டுள்ளனர். இதற்கு ஒரு தரப்பினருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறி மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதால் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.