மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்றதாக எழுந்த புகார்.. 30 பேரிடம் தீவிர விசாரணை.!

மதுரை ஆவினில் 2020-21-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 30 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஆண்டில் நடைபெற்ற மேலாளர் உள்ளிட்ட 61 பணியிட நியமனங்களில், முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆவின் துணைப் பதிவாளர் கணேசன் ஆகியோர் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய ஆவணங்கள் கிடைத்தாக கூறப்படும் நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதன் பேரில் ஆவணங்களுடன் இன்று ஆஜராகியுள்ள பணி நியமனம் பெற்ற 30 பேரிடம் ஆவின் துணை பதிவாளர் கணேசன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.