வங்கி கணக்கில் மீன்பிடி தடைகால நிவாரண தொகை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைகாலத்தில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை ₹5000 வீதம் ₹95 கோடி வழங்கப்படும்.  இத்திட்டத்தை துவக்கி வைக்கும் முகமாக நேற்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பும் வகையிலான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மீன் வளத்துறை ஆணையர் பழனிச்சாமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.