#கடலூர் || முட்புதரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்.. நடந்தது என்ன?

இளம்பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்பார்ட்டத்தில் ஈடுப்படனர்.

கடலூர் மாவட்டம் பெத்தநாயக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் ஏற்பட்டது.  இந்நிலையில்,  கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த  ஸ்ரீதர் என்பவர் அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு,  பையில் வைத்திருந்த சுத்தியால் தலையில்  சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் முட்புதரில் கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீதரை கைது செய்தனர். இதனை அடுத்து, ஸ்ரீதர் பெண்ணை கடத்திச் சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக பெண்ணின் பெற்றொர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து, உறவினர்கள் கடலூர்-வடலூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து,  அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.