ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஷேர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். டாட்டூவை சுரேஷ் கிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி அருகே மாணவ மாணவிகளை இறக்கிவிட சுரேஷ் ஆட்டோவை நிறுத்திய போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதனையடுத்து இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் மற்றும் 12 மாணவ மாணவிகளை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தங்கவேல் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.