குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவருக்கு திருமணமாகி ஷர்மிளா என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. தாய் வீட்டில் இருந்த அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அசோக் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.