சந்தன மரக்கட்டைகள் கடத்தியவர் கைது| Dinamalar

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே மொபட்டில் சந்தன மரக்கட்டைகளைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் செல்வகுமார், வெங்கடேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரி மாநிலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி டி.வி.எஸ்., மொபட் ஓட்டி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர் கொண்டு வந்த பையில் 10 கிலோ அளவில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அயோத்திபட்டணத்தைச் சேர்ந்த சன்னகிருஷ்ணன், 44; என்பதும், விற்பனைக்காக சந்தன மரக்கட்டைகளைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.போலீசார், சன்னகிருஷ்ணனை கைது செய்து, சந்தன மரக்கட்டைகளையும் , மொபட்டையும் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.