சில விடயங்களுக்கு தீர்வு இன்றி கூட்ட அறிக்கையாக தொடருகிறது – முல்லைத்தீவு அரசாங்க அதிபர்

முல்லைத்தீவு மாவட்ட செயலக நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று (27) காலை மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் செயலி ஊடாக இடம்பெற்றது.

கணக்காய்வு முகாமைத்துவ குழு அமைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான கே.லிங்ககேஸ்வரனின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டத்தின் பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சில விடயங்கள் தீர்வு காணப்படாது தொடர்ச்சித்தன்மையுடன் கூட்ட அறிக்கைகளில் வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் சுட்டிக்காட்டினார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் இணை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவாக முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டுவருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்ளின் முன்னேற்றம் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் குழு உறுப்பினர்களான மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில்ஜெயசேகர, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் டி.எம்.ஆர்.கே டிசாநாயக்கா, மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் ஆதவன் ஆகியோரின் பங்குபற்றலுடன் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி. வில்வராஜா, உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.