செல்போன் பேசிய படியே தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண்.. ரயில் மோதி பலி.!

ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே இளம்பெண் செல்போன் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றதால் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் வெங்கடேஸ்வரா அவென்யூவைச் சேர்ந்தவர் ஏமி கார்மைக்கேல் (வயது 26). இவர் இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்டவர்.

மேலும் ஆதரவற்றவரான இவர், ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார். ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலை நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி நண்பருடன் தனியாக அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற மோதி ஏமி கார்மைக்கேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் உயிரிழந்த ஏமி கார்மைக்கேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.