சேலத்தில் திமுக பிரமுகர் மற்றும் அவர் நண்பருக்கு அரிவாள் வெட்டு.. போலீசார் தீவிர விசாரணை..!

சேலத்தில் திமுக பிரமுகர் உட்பட இரண்டு பேர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரான நாகராஜனையும் அவரது நண்பர் பிருத்விராஜ் என்பவரையும் நேற்றிரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளரான விஜயகுமார் என்பவரின் தூண்டுதல் பேரில் தன்னை வெட்டியதாக நாகராஜன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.