சேலம்: கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை.!

சேலத்தில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் லாரி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகனும், சௌமியா, தானு என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதில் சௌம்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் தானு எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தானுவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற தானு அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.