தனக்குத்தானே பிரசவம் பார்த்து, குழந்தையை பெற்று புதரில் வீசிய பெண்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே யாருடைய உதவியும் இன்றி குழந்தையை ஈன்று அதனை புதரில் வீசிச் சென்ற பெண்ணும் அந்தக் குழந்தையும் மீட்கப்பட்டனர்.

ஆண்டவர்கோவில் மான்பூண்டி ஆற்றின் அருகே புதர் ஒன்றில் இருந்து பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட வழிப்போக்கர்கள் அதனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையின் தாய் அங்குள்ள கோவில் வளாகத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். விசாரணையில் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், முறையற்ற உறவில் இந்தக் குழந்தை கருவானதாகக் கூறப்படுகிறது.

செய்வதறியாது வீட்டை விட்டு வெளியேறி புதர் மறைவில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட அந்தப் பெண், கோவில் வளாகத்தில் சென்று படுத்துக் கொண்டது தெரியவந்தது.

தாயும் சேயும் சிகிச்சையில் உள்ள நிலையில், அவரோடு தொடர்பில் இருந்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.