படிப்பை கைவிட்ட 200 மாணவர்கள்.. போலீசாரின் தீவிர முயற்சிக்கு பின் பள்ளியில் படிப்பை தொடர ஆர்வம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட 200 மாணவர்கள், போலீசாரின் தீவிர முயற்சிக்கு பிறகு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

கொரோனா தொற்று காலத்தில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்ட போலீசார், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினர்.

இதன்காரணமாக, மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து பயனடைந்ததாக திண்டுக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் லாவண்யா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.