பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம்- ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் விசாரணை

பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தபால் நிலையத்திலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் குறித்து விசாரித்த போலீசார், சேலம் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற கன்னங்குறிச்சியைச் சேர்ந்த 85 வயதான பழனிசாமி என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த 2010ஆம் ஆண்டு பழனிசாமியின் மகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது முதலே மன அழுத்தத்தில் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.