புதுச்சேரி : குடிநீரில் கலந்த கழிவு நீர்.. 3 குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

புதுச்சேரியில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர் கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இந்த திடீர் வாந்தி மயக்கம் குறித்து விசாரித்துள்ளனர்.

இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்படுவதற்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர் மருத்துவ குழு ஆய்வு செய்ததில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் காரைக்கால் மேடு கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.