மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 700 கிலோ கலப்பட மசாலா பறிமுதல்..! உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை..!

சேலத்தில் மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 700 கிலோ கலப்பட மசாலாவை பறிமுதல் செய்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உடையாப்பட்டியில் பழனியப்பன் என்பவருக்குச் சொந்தமான ஏற்காடு மசாலா நிறுவனத்தில் கலப்படம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான 700 கிலோ மசாலாக்களை பறிமுதல் செய்தனர்.

கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மசாலாக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள், பழனியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.