மதம் மாற சொல்லி நெருக்கடிஇளம் பெண் தற்கொலை| Dinamalar

உடுப்பி,முஸ்லிம் மதத்துக்கு மாற சொன்னதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது என அவரது குடும்பத்தினரும், ஹிந்து அமைப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.உடுப்பி குந்தாபூர் உப்பினகட்ரு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா தேவடிகா, 25. தனியார் ஆயத்த ஆடை ஆலையில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.அப்போது, ஏற்கனவே அறிமுகமான அஜிஸ், 28, என்பவருடன் நட்பாக பழகினார். அவருக்கு திருமணமான விஷயம் தெரிந்தும், அவரை ஷில்பா காதலித்துள்ளார்.ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அஜீசிடம் ஷில்பா கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.இந்நிலையில், மே 23 ல் ஷில்பா பணியாற்றும் ஆலை அருகே வந்து, அவரை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளார். இதனால் வேதனையடைந்த ஷில்பா, அன்று வீட்டுக்கு சென்று விஷம் குடித்தார்.அவரை மருத்துவமனையில் சேர்த்தபோதும், சிகிச்சை பலனின்றி, மே 25 ல் உயிரிழந்தார்.ஷில்பாவின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், ”திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆபாச படங்களை அஜீஸ் அனுப்பியுள்ளார். முஸ்லிம் மதத்துக்கு மாற நெருக்கடி கொடுத்துள்ளார். இல்லை என்றால், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என அவரும், அவரது மனைவி சல்மாவும் மிரட்டினர்” என, குறிப்பிட்டுள்ளனர்.இதையே, பல ஹிந்து அமைப்பினரும் போலீசில் புகாராக கொடுத்துள்ளனர். இதையடுத்து தம்பதியர் தலைமறைவாகி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.