மதுவிற்கு அடிமையானதால் கணவனை பிரிந்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!

மனைவி பிரிந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திராணி பிள்ளைகளுடன் அவரது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் மண்ணணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.