27/05/2022: இந்தியாவில் நேற்று 2,710 பேருக்கு கொரோனா.. 2,296 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா, 14 பேர்  உயிரிப்புடன்,  2,296 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8  மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும், 2,710 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,47,530 ஆக உயர்ந்தது.

தொற்று காரணமாக மேலும்,14 பேர் கடந்த 24மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,539 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,296 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 42,607,177 ஆக உயர்ந்துள்ளது குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 15,814 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,92,97,74,973 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,41,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.