இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயம்..!

இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி 3 வயது குழந்தை படுகாயாமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், வன்னியர் பாளையம்  பகுதியை சேர்ந்தவர் சுகாசினி. இவர் தனது தாயார் மற்றும் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் பின்னால், வந்த பால் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பால் லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.