உருமாறிய கொரோனா மஹா.,வில் 7 பேர் பாதிப்பு| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவில், புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு, ஏழு பேருக்கு இருந்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவின், புனே நகரைச் சேர்ந்த ஏழு பேருக்கு, புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.பி.ஏ., – 4 மற்றும் பி.ஏ., – 5 என்ற இந்த புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை, தென்னாப்ரிக்காவில், முதல் முறையாக, கடந்த ஏப்ரலில் தென்பட்டது.

அதன்பின் பல நாடுகளில் இதன் பாதிப்பு ஏற்பட்டது.தற்போது புனேயைச் சேர்ந்த ஏழு பேருக்கு இந்த புதிய உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இம்மாதம் 4- 18 வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி குணமடைந்துள்ளதாகவும், மஹாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதில், நான்கு பேருக்கு, பி.ஏ., – 4 வகையும், மூன்று பேருக்கு, பி.ஏ., – 5 வகை பாதிப்பும் இருந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.