ஓடும் ரயிலில் சாகசம்.. இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

கெத்து காட்ட ரயில் மீது ஏறிய மாணவன் பாலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஒரத்தூர் பகுதியை சேர்ந்த நீதிதேவன். சென்னை மாநில கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இறப்பதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் ரயிலில் செய்த சாகசம் இணையத்தி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்களிலில் ரயில் படிக்கட்டுக்களில் தொங்கிய படி ரயிலின் மேற்கூரையில் ஏறுவது போன்ற சாகசங்கள் செய்தது வருவது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.