கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிரம்.. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தீவிரமாகும் தாக்குதல்..!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய இராணுவ நிலைகளை உக்ரைன் ராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தெறிந்தனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், செவெரோடோனெட்ஸ்க்கு வெளியே வோஜெவோடிவ்காவின் குடியிருப்பு பகுதிக்கு அருகில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவ நிலைகளை உக்ரைன் படைகள் குண்டுவீசித் தகர்த்தெறிந்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.