தப்பி சென்ற கைதி 24 மணி நேரத்தில் கைது| Dinamalar

சிக்கமகளூரு : போலீசாரை தாக்கி தப்பி சென்ற விசாரணை கைதி, 24 மணி நேரத்தில் பிடிபட்டார்.சிக்கமகளூரின் கடூரை சேர்ந்தவர் தன்ராஜ், 30. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இவரை சிக்கமகளூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் காலை, சிக்கமகளூரு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு கழிவறைக்கு செல்வதாக கூறினார்; உடன் காவலுக்கு, போலீஸ் ஏட்டு ஒருவரும் சென்றார். அங்கு அவரை தாக்கிய கைதி, கழிவறைக்குள் வைத்து பூட்டி வெளியே தாளிட்டு தப்பியோடினார். அங்கிருந்த மற்றவர்கள், கழிவறை கதவை திறந்து, ஏட்டை வெளியே அழைத்து வந்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கைதியை தேடி வந்தனர். கடூரில் தன் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நேற்று காலை சென்ற போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இதன் மூலம் தப்பியோடிய கைதி, 24 மணி நேரத்தில் பிடிபட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.