பாகிஸ்தான் மீனவர் குஜராத்தில் கைது| Dinamalar

ஆமதாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீனவர்கள், குஜராத் மாநிலத்தில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றனர். சமீபத்தில், குஜராத்தின் ஹராமி என்ற பகுதியில், கேட்பாரற்று நின்ற மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பு படையினர், கட்ச் மாவட்ட கடல் பகுதியில், தீவிர தேடுதல்வேட்டை நடத்தினர்.அப்போது, எல்லை தாண்டிய பாக்.,கை சேர்ந்த இரண்டு மீனவர்கள், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்றும் ஒருவர் பிடிபட்டர். மூவரிடம் இருந்தும், ஒன்பது மீன்பிடி படகுகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை தொடர்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.