பாமக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி பதவி விலகிய நிலையில், புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில் பாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுளளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.