முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!

சென்னையில் முன்னாள்  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு  இன்று திறந்து வைக்கிறார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்ததைத் தொடர்ந்து சிலை அமைப்பதற்கான பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.