ராணிப்பேட்டையில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

மாவட்டம் முழுவதிலுமுள்ள பொதுமக்கள், மாணவர்கள், அரசுப்பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

இதில் 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 186 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ஸ்விட்சர்லாந்த் நாட்டில் மூன்று மணிநேரத்தில் 128 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.