வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!

தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட 6 வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை பதிவு செய்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்தார்.

மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், வருமான வரி கணக்கை தக்கல் செய்யாததால் எஸ்.ஜே. சூர்யா வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு அவரது மனுக்களை தள்ளுபடி செய்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.