விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வாக்குவாதம் ; கூட்ட அரங்கை விட்டு கோபமாக வெளியேறிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தங்களது மனுக்களை முறையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அரங்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் கோபமாக வெளியேறினார்.

கூட்டம் நடைபெற்ற தரைதளத்தில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறியும் தங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியும் விவசாயிகளில் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் வினீத் அரங்கத்திலிருந்து வெளியேறினார்.

வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து மற்ற விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.