38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!

சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அரசு சார்பில் முதன்முறையாக சென்னையில் சிலை கலைஞர் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. கலைஞரின் ஐந்து கட்டளைகள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறையும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக ஐம்பது வருடங்களாக பொறுப்புவகித்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பிரதான சாலையான அண்ணா சாலையின் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். அண்ணா அறிவாலயம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடியைத் தொடர்ந்து அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு அருகிலேயே கலைஞர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
image
சுமார் 16 அடி உயரத்திலான முழு உருவ கலைஞரின் வெண்கலச் சிலை, 12 அடி உயரத்திலான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
image
சிலை திறப்புக்கு பின் கலைவாணர் அரங்கில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
1987இல் எம்ஜிஆர் மறைவின்போது அண்ணா சாலையில் தாராப்பூர்டவர் சிக்னல் அருகே இருந்த கலைஞரின் சிலை உடைத்தெறியப்பட்டது. இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பின், அதே அண்ணா சாலையில் தமிழ்நாடு அரசு சாரிபில் கலைஞரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் இந்த சிலைக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.