அட்டலுகம சிறுமியின் மரணம்: குற்றப் புலனாய்வு விசாரணை ஆரம்பம்

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுமியின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது.இதன் மூலம் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தெரியவந்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிசார் பிரதேசவாசிகள் பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தந்தையிடம் நேற்று 5 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறுமி நேற்று முன்தினம் காலை அவரது வீட்டிலிருந்து கடையொன்றிற்கு சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார். பின்னர் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து நேற்று மீட்கப்பட்டது.

சிறுமியின் மரணம் கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.