டெல்லி: ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் நகலை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தவிர்க்க முடியாத பட்சத்தில் பொது மையங்களில் ஆதாரை பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட கோப்பையை அழிப்பது அவசியம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.