இலங்கை மீனவர்களுக்கு 15 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணை விநியோகம் செய்தது இந்தியா.!

எரிபொருள் பற்றாக்குறையால் நின்று போன மீன் பிடித் தொழில் மற்றும் படகு சேவைகளை மீண்டும் துவக்க 700 இலங்கை மீனவர்களுக்கு 15 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணையை இந்தியா அனுப்பியது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

மனிதாபிமான உதவியாக இந்தியா அனுப்பிய 15 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணை தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 700 மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.